மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்காணிப்புக்குழு கூட்டம்!

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்காணிப்புக்குழு கூட்டம்!

 கண்காணிப்புக்குழு கூட்டம்

குடியாத்தம் வருவாய் கூட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்காணிப்பு குழு கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
வேலூர் குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான கண்காணிப்புக்குழு கூட்டம் குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது. தாசில்தார்கள் சித்ராதேவி, விநாயகமூர்த்தி, சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வாக்களிக்க ஊக்கப்படுத்துதல் மற்றும் மாற்றத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் ஏற்படுத்தித் தருதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர் சம்பத், வட்டார கல்வி அலுவலர் கண்ணன், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் பன்னீர்செல்வம், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் வடிவேல், பலராமன், ரகுராமன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story