20 இடங்களில் குளிக்க,செல்பி எடுக்க தடை,மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

20 இடங்களில் குளிக்க,செல்பி எடுக்க தடை,மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி

வால்பாறையில் உள்ள 20 இடங்களில் குளிக்கவோ, செல்பி எடுக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

வால்பாறை சுற்றுலா சென்ற ஐந்து கல்லூரி மாணவர்கள் கடந்த 20ம் தேதி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் குளிப்பது புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் (Selfie) எடுப்பதை சுற்றுலாப் பயணிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அஜாக்கிரதையால் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத்துறை மற்றும் வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை, அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைகளான நீர்வீழ்ச்சி எஸ்டேட் நதி,கருமலை,கூலங்கல் ஆறு,ஸ்டான்மோர் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை,கெஜமுடி சுரங்கப்பாதை,மேல் ஆழியாறு அணை, காதம்பரை 501 சுரங்கப்பாதை,சின்னக்கல்லார் உள்ளிட்ட 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் ஆற்றுப்பகுதிகள் ஆழமானதாகவும், ஆபத்தான சுழல்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை எனவும் இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி எச்சரித்துள்ளார்.


Tags

Next Story