ரத்த தானம் செய்த மாவட்ட ஆட்சியர்

ரத்த தானம் செய்த மாவட்ட ஆட்சியர்
உலக இரத்தக்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் இரத்தானம் வழங்கினார்
உலக இரத்தக்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் இரத்தானம் வழங்கினார்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தைத் முன்னிட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நடத்தப்பட்ட இரத்தான முகாமில் ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்க வந்திருந்தார் அப்பொழுது திடீரென தானாக முன்வந்து ரத்த தானம் வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் . அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாம்களில் அதிக முறை இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.

அதன்படி, 3 முறைக்கு அதிகமாக குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், வாழ்நாளில் 100 முறைக்கும் மேல் குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Tags

Next Story