தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - எம் எல் ஏ ஈஸ்வரன் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - எம் எல் ஏ ஈஸ்வரன் இரங்கல்

ஈஸ்வரன் எம்எல்ஏ - விஜயகாந்த் 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு கொ.ம.தே.க பொது செயலாளர் எம் எல் ஏ ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்தார்.

தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகிய எனது பாசமிகு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒரு மனிதனுக்கு நல்ல மனிதர் என்ற பட்டம் தான் கிடைப்பதற்கரிய பட்டம். நல்ல மனிதர் என்று அதுவும் அனைத்து தரப்பினராலும் நல்லவர் என்று பாராட்டப்படுவது அதிசயம்.

இப்படிப்பட்ட புகழுக்கு சொந்தக்காரர் அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களும் தான் அறிந்த அனைவரும் பசியால் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர். அதையும் தாண்டி தனக்கு என்ன உணவு கிடைக்கிறதோ அதே வகையான உணவு கடைக்கோடியில் இருப்பவனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற மனிதநேயமிக்க உணர்வு கொண்டவர். திரைப்படத்துறையில் அந்த படத்தின் கதாநாயகன் கதாநாயகிக்கு என்ன உணவு பரிமாறப்படுகிறதோ அதே உணவு அனைவரையும் ஒன்றாக அமர வைத்து பரிமாறப்பட வேண்டுமென்ற நிலையைக் கொண்டு அதை செயல்படுத்தியவர்.

எதார்த்தமும், கோபமும் ஒன்றிணைந்து அரசியலிலும் அதே பாணியை கடைப்பிடித்தவர். அது அரசியலில் எடுபடாதது துரதிர்ஷ்டம். அனைவரோடும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் சரி சமமாக பழகிய ஒரு நல்ல மனிதரை இழந்திருக்கின்றோம். அவர் குடும்பத்தாருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், அவர்பால் அன்பு கொண்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன், என எம் எல் ஏ ஈஸ்வரன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story