திமுக அதிமுக வேட்பாளர்கள் மாறி மாறி புகார்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசிலனின் போது திமுக அதிமுக வேட்பாளர்கள் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழியின் மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 லட்ச ரூபாய் உள்ளது. இதுகுறித்து தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்கள் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர் மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 லட்ச ரூபாய் உள்ளது. இதுகுறித்து தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறிய அவர் மேலும் திமுக வேட்பாளர் மீதான 2 ஜி வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது எனவே அவர் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார். இதைபோல திமுக சார்பில் அதிமுக வேட்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி டிப்ளமோ படித்து மருத்துவராக விளம்பரம் செய்து வருவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags

Next Story