புளியம்பட்டி அருகே திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரச்சாரம்

புளியம்பட்டி அருகே திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரச்சாரம்

வாக்கு சேகரித்த ஆ.ராசா

புளியம்பட்டி அருகே நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசா பிரச்சாரம் செய்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசா பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது திமுகவினர் மோடி இந்தியாவில் ஒவ்வொருவரும் 15 லட்சம் ரூபாய் நூறு நாட்களில் வங்கி கணக்கில் போடப்படும் என்று சொன்னது இதுவரை வழங்காததால் மோடிக்கு தெரியப்படுத்தும் விதமாக 15 லட்ச ரூபாய் செக்கை போன்ற தயாரித்து,

டம்மி செக்கை அப்பகுதி திமுகவினர் ஆ ராசாவிடம் வாங்கினார் இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்பதாகும் அப்படி என்றால் இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை யார் ஒரு கையில் பாதுகாப்பாக இல்லை என்றால் மோடியின் கையில் இந்தியா பாதுகாப்பாக இல்லை குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல கடந்த 10 ஆண்டுகாலம் மோடிவிடும் ஒப்படைத்த காரணத்தினால்,

இன்றைக்கு இந்தியாவில் எல்லாமே வேலைவாய்ப்புகள் இருந்தாலும் எல்லாவற்றிலும்இந்திய மிக மோசமான நிலை சந்தித்துக் கொண்டிருக்கிறது அது மட்டுமன்றி மதவாதத்தை தூண்டி அதிலே பிரிவினை ஏற்படுத்தி அதன் ரத்த ஆறு ஓட வைத்து அதிலேயே தனது வாக்கு வங்கி பலப்படுத்தி இன்னொரு முறை பிரதமராக வரலாம் என கனவு காண்கிறார்.

இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவின் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றார் இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story