திமுக டிரக் மாபியா கழகமாக உள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்

திமுக டிரக் மாபியா கழகமாக உள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்

ஆர்ப்பாட்டம் 

தமிழகம் திராவிட மண் தேசிய கட்சிகளை அது அங்கீகரிக்காது, திமுக டிரக் மாபியா கழகமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாணவரணி, மகளிர் அணியினர் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம், கே பி கந்தன், ஆதிராஜாராம் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் ஆட்சியில் 3 ஆண்டுகளில் ஒரே ஒரு சாதனை என்றால், இந்தியாவில் போதை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றி உள்ளனர். திமுக இப்போது டிரக் மாபியா கழகமாக உள்ளது என்றும், தமிழகம் திராவிட மண் தேசிய கட்சிகளை அங்கீகரிக்காது காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றாலும் வெற்றி அடைய முடியாது, மோடி தமிழகம் வருவதால் எந்த மாற்றமும் நிகழாது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அதிமுகவினர் திமுக கூட்டணியில் உள்ள கட்சியை அழைப்பதில் உள்நோக்கம் உள்ளது என்று தெரிவித்ததற்கு பதில் அளித்தவர், எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு தான் லாபம் நாங்கள் யாரையும் அழைக்கவில்லை என்றார்.

Tags

Next Story