திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

ஈஸ்வரன் எம்.எல்.ஏ 

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன் தலைமையிலான குழு அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தரப்பில் டி ஆர் பாலு அமைச்சர் ஐ பெரியசாமி ஆ ராசா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதற்கட்ட பேச்சு வார்த்தை சமூகமாக நடைபெற்றது அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு விரைவில் நடக்கும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

Tags

Next Story