தி.மு.க. அலுவலகங்கள் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு !

தி.மு.க. அலுவலகங்கள் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு !

ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் 

திமுக அலுவலகங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் காந்தி பங்கேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த தக்கான்குளம் அருகே தி.மு.க. மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ் அலுவலகம், மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணச்சந்தர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.இதில் வழக்கறிஞர் உதயகுமார், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், துரை மஸ்தான், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகர செயலாளர் கோபி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் அருண்ஆதி, ராதா வெங்கடேசன், லோகேஸ்வரி சரத்பாபு, சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் தலைமையில் புதிய அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story