வாலாஜா வாக்கு எண்ணும் மைய பகுதியில் டிரோன்கள் பறக்க தடை

வாலாஜா வாக்கு எண்ணும் மைய பகுதியில் டிரோன்கள் பறக்க தடை

மாவட்ட எஸ்பி

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையப்பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து ராணிப்பேட்டை எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதனால் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவு வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் வாக்கு எண்ணும் நாளான ஜூன் மாதம் 4ந் தேதி வரை பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணமாக டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story