நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு!!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு!!

மேட்டூர் அணை 

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. குறிப்பாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கடந்த 11-ந் தேதி முதல் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 89.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,445 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 89.92 அடியாகவும், நீர் இருப்பு 52.55 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story