தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் போராட்டம் 

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் போராட்டம் 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலர்களையும், வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி கொலை மிரட்டல் விடுத்து, அராஜக செயல்களை செய்த, ஒன்றியக் குழு துணைத் தலைவர் தீனதயாளன் என்பவர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும், அவரை பதவி நீக்கம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரியும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தஞ்சை மாவட்டத்தின் அனைத்து 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியரகத்திலும் (வளர்ச்சி பிரிவு அலுவலகங்கள்) பணிபுரியும் ஊழியர்கள் 800 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அரை நாள் வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story