பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வந்தார். அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன் பின்னர் அவர் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் பணி குறித்தும், பாராளுமன்ற தேர்தல் பணி குறித்தும் விரிவாக கேட்டு அறிந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் , ஒன்றிய செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

Tags

Next Story