ஜெயங்கொண்டம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

ஜெயங்கொண்டம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

ஜெயங்கொண்டம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெயங்கொண்டம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர், ஜூன் 29- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கார் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது தம்பி மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்துறை அருகேயுள்ள குழுமூர், துர்க்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (64) . வெள்ளிக்கிழமை இவர், தனது தம்பி மகன் க.கோவர்த்தனனை(18) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மயிலாடுதுறை சென்று விட்டு, ஊருக்கு திரும்பினர்.கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த கார் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவர்த்தனன் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் கடலூர் மாவட்டம், சோழதரம், குடிகாடு,கீழத் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பழனிச்சாமியிடம் (36) விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Tags

Next Story