தேர்தல் நடத்தை விதிமீறல்: அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

தேர்தல் நடத்தை விதிமீறல்: அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் ,காவல்துறையை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் உட்பட 20 அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் உதகை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முன் ஜாமின் கோரி கப்பச்சி வினோத் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவைப்படும் போது காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story