ஆதம்பாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் கேபிள் வயர்கள் கட்டப்பட்டுள்ள மின்கம்பம் உடைந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் நான்காவது தெருவில் கேபிள் வயர்கள் கட்டப்பட்டிருக்கும் மின் கம்பம் உடைந்து சாய்ந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக கேபிள் மின் வயர்கள் ஆங்காங்கே அருந்தும் சாலைகளில் தாழ்வாக தொங்கவிடப்பட்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்களை அதிகமாக இந்த சாலைகளை பயன்படுத்தும் நிலையில் வாகனங்களின் செல்பவர்கள் கழுத்தில் வயர்கள் மாட்டி கீழே விழும் அபாய நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடிப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்ற உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தாழ்வாக சென்ற கேபிள் வயர் வாகன ஓட்டின் கழுத்து சிக்கி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story