இ.பி.எஸ் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்

இ.பி.எஸ் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என அரக்கோணம் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என அரக்கோணம் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும். கழக நிர்வாகிகள் ஏழை, எளிய மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் தடுமாறியபோது, சாதாரண தொண்டனாக இருந்து எண்ணற்ற சோதனைகளை எதிர்கொண்டு ஒருதுளி சேதாரம் இல்லாமல் கழகத்தை மீட்டெடுத்து, 2 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக உருவாக்கி, ஒரு சாதாரண தொண்டர் கூட தலைமை வகிக்கலாம் என்ற வரலாற்றை உலக அரசியல் தலைவர்களுக்கெல்லாம் ஒப்புவித்தவர் நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரது 70-வது பிறந்த நாள் விழா, வருகிற 12-ந் தேதி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் முழுவதும் கோலமாக இருக்க வேண்டும்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு, ஏழைஎளிய மக்களுக்கு அன்னதானம், வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்க வேண்டும். மேலும் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மரம் நடுதல், தண்ணீர் பந்தல் திறப்பு போன்றவற்றை ஒவ்வொரு கிளை, வட்டங்களிலும் சிறப்பாக செய்திட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். இந்தநிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story