மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் - ஈபிஎஸ்

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் - ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி 

தமிழக சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவிரி விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார்.

அவரது தீர்மானத்தில் "தமிழக அரசு அலட்சியமாக இருப்பதால், கர்நாடகா அரசு நினைப்பது போல் மேகதாதுவில் அணை கட்டி விடும். காவிரி நீர் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்ற பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதா? காவிரி ஆணைய கூட்டத்தில் தந்திரமாக மேகதாது விவகாரம் பேசப்பட்டுள்ளது. மேகதாது குறித்து பேசப்பட்ட காவிரி ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டது ஏன்? மேகதாது விவகாரத்தில், சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும்" என குறிப்பிட்டு பேசினார்.




Tags

Next Story