சேரி என குஷ்பூ கூறியதில் தவறில்லை - ஈவிகேஸ் இளங்கோவன்

சேரி என குஷ்பூ கூறியதில் தவறில்லை - ஈவிகேஸ் இளங்கோவன்

நடிகை குஷ்பூ பயன்படுத்திய சேரி என்ற வார்த்தையில் எதுவும் தப்பாக இருப்பதாக தெரியவில்லை EVKS இளங்கோவன்

நடிகை குஷ்பூ பயன்படுத்திய சேரி என்ற வார்த்தையில் எதுவும் தப்பாக இருப்பதாக தெரியவில்லை என EVKS இளங்கோவன் தெரிவித்துள்ளார்
ஈரோட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான EVKS இளங்கோவன் திறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , .நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் , நடிகை குஷ்பூ பயன்படுத்திய சேரி என்ற வார்த்தையில் எதுவும் தப்பாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்ற EVKS இளங்கோவன் , தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான் என்றும் தமிழக மக்கள் காங்கிரஸ் மீது பற்று வைத்து ஆதரவு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.

Tags

Next Story