செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41 ஆவது முறையாக நீட்டிப்பு

X
செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 41 ஆவது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 41 ஆவது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடடத்தக்கது.
Next Story
