சென்னையில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
சிரப்பு ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி பிரிவில் கூடுதல் நெரிசலைக் குறைக்க பின்வரும் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது. இரயில் எண் 06039 இரயிலானது சென்னை எழும்பூரில் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 9:25க்கு புறப்பட்டு நாளை காலை 5:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும் என தென்னக இரயில்வே தெரிவித்து இருக்கிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 9. 25க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் வழியாக நாளை காலை 5.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி இரயில் நிலையம் சென்றடையும் என தென்னக ரயில்வே தெரிவித்திருக்கிறது.

Tags

Next Story