கங்கைகொண்ட சோழபுரத்தில் கடும் வெப்பம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரியலூர், ஏப்.27- அரியலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் தாக்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களையும் விடவில்லை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தற்போது கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் 105 டிகிரிக்கு குறையாமல் இருப்பதால் மதியம் சுமார் 12 மணி முதல் 4 மணி வரை வெளியூர் பக்தர்களை தவிர உள்ளூர் பக்தர்கள் வருவது சற்றே குறைந்துள்ளது. நான்கு மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறையும் போது பக்தர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. நேற்று பிற்பகலில் வெயில் அதிகரித்த போது வெறிச்சோடி காணப்பட்ட கோவில் பிரகாரம்.

Tags

Next Story