போலி பெண் டாக்டர் கைது

போலி பெண் டாக்டர் கைது

போலி டாக்டர் கைது

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் பிளஸ் டூ படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (37). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமி உத்தரவின் பேரில், உதவி மருத்துவர் நர்மதா தலைமையிலான மருத்துவ குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் திவ்யா ஆங்கில மருத்துவம் பார்த்ததை உறுதி செய்த மருத்துவ குழுவினர், திவ்யாவை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்து, கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story