ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு கொடி உருவாக்கி ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு கொடி உருவாக்கி ரசிகர்கள் உற்சாகம்

லால் சலாம் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உருவம் மற்றும் வசனங்கள் அடங்கிய கொடியை ரசிகர்கள் அறிமுகப்படுத்தினர்.

லால் சலாம் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உருவம் மற்றும் வசனங்கள் அடங்கிய கொடியை ரசிகர்கள் அறிமுகப்படுத்தினர்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இதில்ல நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகிய இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று (பிப்.9) லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. , திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லால் சலாம் திரைப்படம் வெளியானது. திருச்சி மாரிஸ் திரையரங்கின் வளாகத்தில் ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து, மேளதாளத்துடன் நடனம் ஆடி கொண்டாடி தீர்த்தனர்.

அப்போது படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவத்துடன், ‘சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’ என்ற வசனம் பொருந்திய கொடியை ரசிகர்கள் அறிமுகம் செய்தனர். மேலும், இந்த படத்தில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ரஜினிகாந்த் நடித்துள்ளார் என ரசிகர்களால் கூறப்படுகிறது.


Tags

Next Story