தருமபுரி : காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

தருமபுரி : காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேவுள்ள ஜில் திம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளப்பன் (60), விவசாயி. இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி விளை நிலங்களில் சுற்றி திரிந்துள்ளன. அப்போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குள்ளப்பனை அந்த வழியாக கடந்து சென்ற இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடிரென ஆக்ரோசமாகி தும்பிக்கையால் தாக்கி, குள்ளப்பனின் கால் பகுதியை தந்தந்தால் குத்தி கிழித்து விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறது, காயங்களுடன் மீட்கப்பட்ட குள்ளப்பன் முதலில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தீபாவளி பண்டிகை சமயத்தில் விவசாயி குள்ளப்பன் யானையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது காட்டு யானைகளின் நடமாட்டத்தால் கிராம மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story