திருச்செந்தூரில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு!

திருச்செந்தூரில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு!
பைல் படம்


திருச்செந்தூரில் கடற்கரையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒருவர் மது அருந்திவிட்டு, திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதையெடுத்து, அவர் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்துார் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், "உடலில் தீ வைத்தவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதவன் (52) என தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story