பனப்பாக்கத்தில் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா!

பனப்பாக்கத்தில் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா!

பனப்பாக்கத்தில் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்ககோரி விவசாயிகள் தர்ணா போராட்டம் செய்தனர்.


பனப்பாக்கத்தில் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்ககோரி விவசாயிகள் தர்ணா போராட்டம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கக்கோரி விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள், மின்சார வினியோகம் குறித்த கால நேர அட்டவணையை விசாயிகளுக்கு தெரிவிக்கவேண்டும். நெற்பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கு ஏதுவாக மும்முனை மின்சாரத்தை கூடுதலாகவும், தடையின்றியும் வழங்க வேண்டும். ப

னப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் தொடர் மின்திருட்டை தடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன் மின் வாரிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story