தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கடைமடை விவசாயிகள் சங்கத்தினர், மனித நேய ஜனநாயக கட்சியினர் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். போராட்டத்தில் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் ஸ்ரீதர், தமிழ்செல்வன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story