பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை பணிச்சுமையா? குடும்ப பிரச்சனையா? போலீஸ் விசாரனை !

பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை பணிச்சுமையா? குடும்ப பிரச்சனையா? போலீஸ் விசாரனை !

தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர், மார்ச் 28 - ஜெயங்கொண்டம் அருகே பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணிச்சுமை காரணமாக இறந்தாரா அல்லது குடும்பத் தகராறு காரணமாக இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யகலா (வயது 38)இவர் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நந்தகோபாலகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 6 வயதில் மகன் உள்ளனர். கணவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட காரணத்தினால் அரியலூர் மாவட்டம் காட்டகரம் கீழத் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் சத்தியகலா மகனுடன் வசித்து வந்தார். இதனிடைய சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது சத்யகலா தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சத்தியகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பெண் போலீஸ் சத்யகலா பணிச்சுமை காரணமாக இறந்தாரா அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக இறந்தாரா என்பது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story