ஜாபர் சாதிக் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றக்கோரி மனு தாக்கல்.

ஜாபர் சாதிக் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றக்கோரி மனு தாக்கல்.

ஜாபர் சாதிக்

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்ததை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் சாந்தோமில் உள்ள வீட்டை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி சீலிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் பல வருடங்களாக இந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும் தற்போது சோதனை நடத்தி அனைத்து பொருட்களையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்ற நிலையில் வீட்டின் சீலை அகற்றக் கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags

Next Story