குடியாத்தம்: வீட்டில் தீ விபத்து -பொருட்கள் எரிந்து நாசம்!

குடியாத்தம்: வீட்டில் தீ விபத்து -பொருட்கள் எரிந்து நாசம்!

போலீசார் விசாரணை

குடியாத்தம் அருகே வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கீழ்செட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது வீட்டில் திடீரென தீப்பற்றியது. இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், மின் விசிறி, துணிகள் உள்ளிட்ட பொருட்களிலும் தீ பிடித்து எரியத்தொடங்கியது. இதுகுறித்து பொதுமக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நிலைய அலுவலர் அரசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story