முதல்முறை வாக்களர்கள் குறிப்பாக பங்கேற்க வேண்டும் - ஆளுநர் ரவி

ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவில் முதல்முறை வாக்காளர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும், என வாக்களித்த பின் ஆளுநர் ஆர் என்.ரவி கூறினார்.
கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப்பள்ளியில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வாக்களித்தனர். தென் சென்னை தொகுதியில் தனது வாக்கை பதிவிடுவதற்காக பீகாரிலிருந்த தனது வாக்கை இங்கு மாற்றியுள்ளார் ஆளுநர் ரவி. வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆளுநர் ஆர் என் ரவி, ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா. நான் இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும்.

Tags

Read MoreRead Less
Next Story