குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவியில்  வெள்ளப்பெருக்கு

குற்றால அருவி

தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் தற்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை குறைந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story