குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - பயணிகள் ஓட்டம் !!!

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - பயணிகள் ஓட்டம் !!!

வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென்மண்டல பகுதிகளான தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆணைகள் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதில் குறிப்பாக சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவியில் பழைய குற்றாலம் ,மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் 17 தனது குடும்பத்தாருடன் பழைய குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயம் அடைந்தான். சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story