வடிந்தது வெள்ளம் - தூத்துக்குடிக்கு வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்

வடிந்தது வெள்ளம் - தூத்துக்குடிக்கு வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்

தூத்துக்குடி ரயில் நிலையம் 

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து சென்னையிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் கடந்த ஐந்து நாட்களுக்குப் பின்பு இன்று காலை வந்தடைந்தது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 17ஆம் தேதி பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை நீர் வெள்ளம் போல் சொல்வதுடன் தூத்துக்குடி ரயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த 15ஆம் தேதி முதல் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் தாங்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

Tags

Next Story