ஊட்டியில் துவங்கிய மலர் கண்காட்சி ! பிரமிக்கும் டிஸ்னி வேர்ல்ட் !

ஊட்டியில் துவங்கிய மலர் கண்காட்சி ! பிரமிக்கும் டிஸ்னி வேர்ல்ட் !

 மலர் கண்காட்சி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சியை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

ஊட்டியில் இ பாஸ் அறிமுகபடுத்திய நிலையில்126வது மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது.

மே 20ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொய் மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில் மலர் அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் ரோஜா மலர்கள் மூலம் பிரம்மாண்ட ஆக்டோபஸ், டிஸ்னி வோர்ல்டு என 10 வகையான வடிவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல் நாளன இன்றும், நிறைவடையும் 20ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு மட்டும் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story