எம்பி கனிமொழி வாகனத்தில் பறக்கும் படை சோதனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சார வாகனத்தை மனப்பாடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறையாக திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதை தொடர்ந்து இவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி கருணாநிதி திருச்செந்தூரில் இருந்து குலசேகரப்பட்டணம் வழியாக மனப்பாடு மீனவர் கிராமத்திற்கு தனது தேர்தல் பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மனப்பாடு கிராமம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் கனிமொழியின் வாகனத்தை மறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கனிமொழி கையில் இருந்த பேக் மற்றும் வாகனத்தில் உள்ள பொருட்கள் அனைத்திலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story