ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை எச்சரிக்கை!

ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை எச்சரிக்கை!

ரேஷன் கடை

ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.

இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டதாக செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story