முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் அனுசரிப்பு

அரியலூரில் முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் அனுசரிக்கப்பட்டது.


அரியலூரில் முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் அனுசரிக்கப்பட்டது.
அரியலூர், மே 27- அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நேரு படத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் மா.மு.சிவகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தி, நேரு பிரதமராக பதவி வகித்த காலங்களில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்ததை பற்றி நினைவு கூறினார் .பின்னர், வட்டார தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன், திருநாவுக்கரசு, மாவட்ட பொதுச் செயலர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி .எஸ் பழனிச்சாமி, நகரச் செயலர் மணிகண்டன் உள்ளிட்டோரும் நேரு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story