முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு.

ராஜேஷ் தாஸ் 

பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மனுவை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவின் மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு அளித்திருந்தார். வீட்டின் மீது ராஜேஷ் தாஸ்க்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுக்க முடியாது என்று பீலா வெங்கடேசன் தரப்பு தெரிவித்துள்ளது. வீட்டுக்கடனை தாம் செலுத்தி வருவதாகவும் தனது உடல் நலனையும் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ராஜேஷ் தாஸ் தரப்பு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story