சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் - தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி.

சவுக்கு சங்கர் மீது  குண்டர்  சட்டம் - தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி.

சவுக்கு சங்கர் 

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க தடை விதிக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காவல் அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்ததாக பதிவு செய்த வழக்கில், கோவை சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கரை மே 5ஆம் தேதி தேனியில் கைது செய்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சவுக்கு மீடியா ஊழியர் விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யூகத்தின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story