உரிய பலன்கள் கிடைக்கும் - My v3 ads உரிமையாளர் யூ டியூபில் பதிவு

உரிய பலன்கள் கிடைக்கும் -  My v3 ads உரிமையாளர் யூ டியூபில் பதிவு

சக்தி ஆனந்தன் 

கோவை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த Myv3 ads நிறுவன இயக்குநர் சக்தி ஆனந்தன் அவரது யூடியூப் சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தனது நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த My v3 ads என்ற நிறுவனம் குறித்தும் அந்த நிறுவனத்தின் MD சக்தி்ஆனந்தன் குறித்தும் கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் தன் மீதும், My v3 ads நிறுவனம் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ம் தேதி போராட்டம் நடத்தினார்.

காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சக்தி ஆனந்தை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சக்தி ஆனந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது.

இதனையடுத்து புதன் கிழமை பிற்பகல் முதல் வியாழக்கிழமை பிற்பகல் வரை சக்தி ஆனந்தனிடம் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் விசாரணை நிறைவடைந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சக்தி ஆனந்தன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரித்த 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.இதனையடுத்து நேற்றிரவு சக்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கபட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த Myv3 ads நிறுவனத்தின் MD சக்தி ஆனந்தன் நேற்றிரவு அவரது YouTube சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தனது நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.தலைவர் is back என தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆடியோ பதிவு youtube சேனலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சக்தி ஆனந்தன் தனது YouTube சேனலில் வாடிக்கையாளர்களுக்கு ஆடியோ வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story