பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்

பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்

பாம்பு கடித்து பலியான சிறுமி

ராணிப்பேட்டை அருகே பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பொன்னம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் திகழ்வதி (9). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டில் புகுந்த விஷப்பாம்பு திகழ்வதியை கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளாள்.அருகில் தூங்கிக்கொண்டிருந்த தாய், தந்தை இருவரும் எழுந்து பார்த்தபோது விஷப்பாம்பு வீட்டின் உள்ளே இருந்துள்ளது.

உடனடியாக சிறுமியை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (27.04.2024) மாலை சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இது தொடர்பாக வாழைப்பந்தல் போலீசார் இன்று (28.04.2024) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story