ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

கைது

குடியாத்தம் அருகே ஆடு திருடிய இருவரை குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை அக்பர் சாயபு தெருவைச் சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர் செதுக்கரையில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டை தனது வீட்டின் அருகே கட்டி வைப்பது வழக்கம். அதன்படி கடந்தசில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே ஆட்டை கட்டி வைத்திருந்தார்.

அந்த ஆட்டை மர்மநபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். அவர் தனது நண்பர்களுடன் ஆட்டை தேடி பார்த்தும் காணவில்லை. நேற்று காலை குடியாத்தம் காமராஜர் பாலத்தை அடுத்த திரையரங்கம் அருகே 2 பேர் ஆடுடன் நின்று கொண்டிருந்தனர். இதயத்துல்லா அருகே சென்று பார்த்தபோது, தன்னுடைய வீட்டில் திருட்டுப்போன ஆடு என தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது நண்பர்கள் உதவியோடு ஆடுடன் 2 பேரை பிடித்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் அவர்களிடம் விசாரித்தனர். 2 பேரும் குடியாத்தம் நடுப்பேட்டை பங்காருசெட்டி தெருவைச் சேர்ந்த பிரவீன் (27), புவனேஸ்வரிபேட்டை செல்வபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (27) எனத் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story