அப்துல்லாபுரம் பகுதியில் அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு!

அப்துல்லாபுரம் மற்றும் பெருமுகப் பகுதியில் நீர் தேக்க தொட்டிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் அப்துல்லாபுரம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக வேலூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பெருமுகை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் இயக்குனர் சுமதி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story