''கள்ளச்சாராய உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்" - அண்ணாமலை !

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை !

அண்ணாமலை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழப்பு, 10 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது

மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், தற்போது 5 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Tags

Next Story