ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி வருகை

ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி வருகை


ஆளுநர் ஆர்.என்.ரவி


5 நாள் பயணமாக ஊட்டி ராஜ்பவன் வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் துணை வேந்தர்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி 25-ம் தேதி மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரிக்கு வரும் அவர் 2 மணி நேர ஓய்வுக்கு பிறகு மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் வருகிறார். 26-ம் தேதி ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் ஆளுநர், 27 மற்றும் 28-ம் தேதிகளில் துணை வேந்தர்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

29-ம் தேதி கோடநாடு காட்சி முணை செல்லும் ஆளுநர் ஆர்.என் ரவி அடுத்த நாள் 30-ம் தேதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து காலை 11.15 மணியளவில் ஊட்டியில் இருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி சென்று ஓய்வெடுத்து விட்டு காரில் கோவை செல்லும் அவர் மதியம் சுமார் 3 மணியளவில் சென்னைக்கு கிளம்ப உள்ளார்.

Tags

Next Story