பஸ்ஸில் குட்கா கடத்தி வந்தவர் கைது

பஸ்ஸில் குட்கா கடத்தி வந்தவர் கைது
கைதானவர்
கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பஸ்சில் குட்கா கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தி வரும் பஸ்ஸில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக சத்தி போலீஸார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநில பஸ்கள் இருந்து இறங்கிய பயணியிடம் சோதனை செய்ததில் ரூபாய் 9,600 மதிப்பிளான 16 குட்காவை கிலோவை பறிமுதல் செய்து விசாரனை நடத்தியதில் சத்தி, வடக்குப் பேட்டை, கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (40) என தெரியவந்தது. சத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story