கார்த்திக் சிதம்பரத்திற்க்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவு

கார்த்திக் சிதம்பரத்திற்க்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவு

கார்த்திக் சிதம்பரம் 

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தரக் கோரி ஆன்லைன் மூலம் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாககூடிய வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சட்ட விதிகளின் படி 10 ஆண்டுகளுக்கு சொல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து பெற கார்த்திக் சிதம்பரத்திற்கு உரிமை உள்ளது என மனுதாரர் தரப்பில் பேசப்பட்டது. நீதிமன்றம் விதிக்ககூடிய நிபந்தனைகளை இதுவரை கார்த்திக் சிதம்பரம் மீறவில்லை என நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story