தமிழகத்தில் தணிந்தது வெப்பம் - 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு !!

தமிழகத்தில் தணிந்தது வெப்பம் - 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு !!

மழை

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெப்பத்துக்கு மத்தியில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகின்ற நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஒன்று நிலவுவதால் இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று வானிலை நிலவரப்படி தமிழ்நாட்டில் சில இடங்களில் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழையும் திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதனை அடுத்து( நாளை வியாழக்கிழமை) முதல் வருகின்ற (19ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய இடங்களிலும் புதுச்சேரி ,காரைக்கால், பகுதிகளிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் இதை தவிர கன்னியாகுமரி, நெல்லை ,தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,கடலூர் ,தென்காசி ,தேனி ,திண்டுக்கல் ,கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ,திண்டுக்கல், நாமக்கல், கரூர் திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, தேனி,தென்காசி, நெல்லை ,கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் (நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை) கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனை அடுத்து இதே போல்(18 -தேதி சனிக்கிழமை)நீலகிரி ,கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி ,தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,புதுக்கோட்டை, கடலூர் ,அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓர் இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

கோடை மழை பரவலாக பெய்துள்ளதால் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. கடந்த சில நாட்களாக உள் மாவட்டங்களில் தான் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அந்த பகுதிகளில் கூட வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக குறைய கூடும் எனவும் ஒரே இடங்களில் இன்று மட்டும் இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹிட் வரை அதிகரித்து காணப்படும் எனவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Tags

Next Story